இஸ்ரோ விண்வெளி மையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு..! வெளியான தகவல் கூறுவது என்ன?..!!
isro aerospace station high alert by police force
இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக உளவுத்துறையானது தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்., தமிழகத்தில் கண்காணிப்பு அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்., மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடங்களில் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்., ஆங்காகே சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு., வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்., இந்தியாவில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடற்கரையோர பகுதியில் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் தீவிர பாதுகாப்பானது ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகள் மற்றும் கலங்கரை விளக்கங்களில் இருந்தவாறு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சமயத்தில்., ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும்., அங்குள்ள இராக்கெட் ஏவுதளத்திற்கும் உச்சகட்ட பாதுகாப்பானது வழங்ப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியை அங்குள்ள காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
isro aerospace station high alert by police force