இந்தியாவில் ஒரு மாநிலத்தையே கட்டுக்குள் கொண்டு வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள்.! வெளியான பகீர் தகவல்.!!
ISIS Terrorists plan to attack india
கடந்த 2013 ம் வருடத்தின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் சிரிய நாட்டின் அரசு படைகளை எதிர்த்து அங்குள்ள அல்நுஸ்ரா முன்னணி என்ற அமைப்பானது போராடியது. அதனை போன்று ஈரான் நாட்டில் இருந்த அல்கொய்தா அமைப்பு ஈராக்கில் போராடிக்கொண்டு இருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கியது.
இந்த இரண்டு அமைப்புகளும் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கவராத அமைப்பை உருவாக்கியதை அடுத்து., தெற்கு சிரியாவில் உள்ள பெரும்பான்மையான பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. கடந்த 2014 ம் வருடத்தின் துவக்கத்தில் இருந்து ஈராக்கில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்குள்ள பலுஜா மற்றும் மோசூல் நகர்களை கைப்பற்றி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இந்த நேரத்தில் தனது சுமார் 30 ஆயிரம் வீரர்களின் மூலமாக தொடர் தாக்குதலை நடத்தி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்த நிலையில்., ஈராக் மற்றும் சிரிய நாட்டில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில்., ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உலகம் முழுவதிலும் நிறுவுவதற்கு பலதரப்பட்ட முயற்சியை ரகசிய முறையில் எடுத்து வந்தனர்.
இதுமட்டுமல்லாது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இந்த தாக்குதலுக்கு பகிரங்கமாக நாங்கள் தான் இந்த தாக்குதலை நிகழ்த்தினோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது கூறியது. இந்த நிலையில்., இந்தியாவில் ஒரு மாநிலத்தையே எண்களின் கட்டுப்பாட்டில் நிறுவியுள்ளோம் என்று தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த மாநிலத்தின் கிளைக்கு அரபு மொழியில் "ஹிந்த் இன் வாலே" என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்தியாவில் இருக்கும் அமாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில்., இந்த கருத்தை ஜம்மு காஷ்மீர் காவல் துறை அதிகாரி நிராகரித்துள்ளது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த "ஹிந்த் இன் வாலே" கூற்றை அரேபிய மொழியில் மொழிபெயர்த்தால் சுவர் என்ற குறுந்தகவளும்., ஹிந்தியில் மொழி பெயர்த்து பார்த்தால் வாழ் போன்ற பகுதி என்றும் தெரியவருகிறது. இதனை வைத்து பார்க்கும் போது தாக்குதல் இந்தியாவின் சுவர் என்று இயற்கையாக மதில் போன்று அமைந்துள்ளது இமயமலை பகுதிகள் ஆகும்., இதன் மூலமாக இமயமலை பகுதிகளையும்., வாழ் போன்ற பகுதி என்று பார்க்கையில் கேரள மாநிலத்தையும் கூறுகிறது என்ற தகவல் கிடைக்கிறது. இதன் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது.
English Summary
ISIS Terrorists plan to attack india