கணவனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய புத்திசாலி மனைவி.! நொடியில் உயிர்த்தப்பித்த அதிசயம்.!  - Seithipunal
Seithipunal


பெங்களூரு அருகே கடந்த திங்கள்கிழமை நரேஷ் என்ற   சாப்ட்வேர் இன்ஜினியர் தன்னுடைய மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது சில கொள்ளையர்கள் நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டு அவர்களின் காரை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். 

இதனால் உடனடியாக காரை விட்டு நரேஷ் இறங்கி உள்ளார். பைக்கில் வந்த அந்த கொள்ளையர்கள் பலமாக நரேஷைத் தாக்கி அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். 

இந்த தாக்குதலில் நரேஷ்க்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் வலியால் துடிதுடித்து உள்ளார். அப்பொழுது அவருடைய மனைவி புத்திசாலித்தனமாக காரின் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை அமுக்க வேகமாக காரை எடுத்துள்ளார்.

இதனால், எதிரே நின்றிருந்த கொள்ளையர்களின் பைக் மீது கார் மோதியதில் பைக்கில் அமர்ந்து இருந்த அந்த கொள்ளையர்கள் தட்டு தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது மின்னல் வேகத்தில் காரை எடுத்த அவரது மனைவி ஓட்டிக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு வந்து பின்னர் இருவரும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, பின்னர், அவரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியின் சமயோசித புத்தியால் கணவன் உயிர் பிழைத்த சம்பவம் பாராட்டுக்குரியதாய் மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intelligence wife save her husband from thief


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->