இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தும் மனநோய் பாதிப்பு பிரச்சனை..! வெளியான அதிர்ச்சி அறிக்கை.!!
indian peoples have mentally disorder problem
இங்கிலாந்து நாட்டில் உள்ள தலைநகர் இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லான்செட் மருத்துவ இதழானது இந்தியாவின் மனநோய்கள் பாதிப்பு குறித்த ஆய்வு கட்டுரையினை வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுரையின் அடிப்படையில்., கடந்த 1990 ஆம் வருடம் முதல் கடந்த 2017 ஆம் வருடம் வரை மாநிலவாரியாக எடுக்கப்பட்ட ஆய்வுத்தரவுகளின் அடைப்படையில் ஆய்வு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கடந்த 1990 ஆம் வருடத்தையும்., கடந்த 2017 ஆம் வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் மனநோய்க்கான பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும்., சுமார் 19 கோடியே 70 இலட்சம் இந்தியர்கள் மனநோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் மனநோயாளியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்., இது இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களிடம் காணப்படும் மனநோய்பாதிப்பு பதற்றம்., மனக்கவலை., மனசிதைவு., மனநிலை பிறழ்ச்சி., அறிவு வளர்ச்சி நின்று போவது தொடர்பானவை கூறப்பட்டுள்ளது. இதில் மனக்கவலை மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மொத்தமாக இந்தியாவில் 4 கோடியே 60 இலட்சம் பர மனக்கவலை பிரச்சனையினாலும்., 4 கோடியே 50 இலட்சம் பேர் பதற்றம் போன்ற பிரச்சனையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனக்கவலையை பொறுத்த வரையில் வயதான நபர்களிடம் அதிகளவு இருப்பதாகவும்., இது தற்கொலைக்கு காரணமாக அமைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க இந்திய குழந்தைகள் மன இறுக்கம்., அறிவு வளர்ச்சி இல்லாதது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாகவும்., தென்னிந்திய பகுதியை விடவும் வடஇந்தியாவில் இந்த பாதிப்பு அதிகளவில் இருப்பதாகவும் தெரியவருகிறது. இறுதியாக கடந்த சில வருடமாக இப்பிரச்சனை உயர்ந்த அளவில் இருந்து குறைய துவங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
indian peoples have mentally disorder problem