#Breaking: ஜூன் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு..!!
Indian janta curfew amid extend june 30
ஊரடங்கு தளர்வுகளுக்கான புதிய வழிகாட்டல் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து வரும் ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு விதிகளில் இருந்து தளர்வுகள் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பச்சை மண்டலத்தில் ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் வழிபட்டு தளங்கள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழத்துவங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் பச்சை மண்டலத்தில் ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவை ஜூன் மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமான போக்குவரத்து அனுமதி செய்யப்படும்.
கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து மெட்ரோ இரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்றும், ஊரடங்கு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்படுவதாகவும், வழங்கப்படும் தளர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகள் மற்றும் நீச்சல்குளங்கள் சூழலை பொறுத்து திறக்கப்படும். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை யாரும் வெளியே வர கூடாது என்று அறிவித்துள்ளது. நாடுதழுவிய அளவில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே தடை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான அனுமதியும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian janta curfew amid extend june 30