அத்துமீறி ஊடுருவ முயற்சி..! இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு மேற்கொண்ட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பின்னர் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வருகிறது. 

இதனைத்தொடர்ந்து உளவுத்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கிய நகர்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்றும்., எல்லையில் பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவ காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. 

indian army, army, BSF India,

இதனையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாது காவல் துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரோவால் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லையில்., சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபரொருவர் நடமாடிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்த சமயத்தில்., இவரின் நடமாட்டத்தை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர்., அவர் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில்., இதனை கண்டுகொள்ளாத அவர் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டதை அடுத்து., இவரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army shoot Pakistan illegal entry man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->