இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. ஐந்து பாதுகாப்பு படையினர் வீர மரணம்.!!
Indian army officers shot terrorist in jammu Kashmir
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், காஷ்மீர் மாவட்டத்தில் எல்லை வழியாக அத்துமீறி நுழைந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா இராணுவத்தினர் செயல்பட்டு வரும் நிலையில், அங்குள்ள வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிசூடு 12 மணிநேரத்திக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கும் - பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிசூடு நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்திய இராணுவத்தின் கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல் அதிகாரி என ஐந்து பேர் மரணமடைந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian army officers shot terrorist in jammu Kashmir