பாக். இராணுவம் அத்துமீறல்.. இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படை அத்துமீறி நடத்திய தாக்குதலில், 2 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு பயங்கரவாதிகளை அனுப்பும் பொருட்டு, இந்திய ராணுவத்தினரை ஒருபுறத்தில் பரபரப்பாகி விட்டு, மற்றொரு புறத்தில் பயங்கரவாதிகளை எல்லை தாண்டி ஊடுருவ வைக்கும் முயற்சியை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது. 

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீதும், இந்திய கிராமங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டம் சுந்தர்பாணி பகுதியில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பிரேம்குமார் பகதூர் சாஸ்திரி மற்றும் சுக்பீர் சிங் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army Officers died Pak Army Case fire 27 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->