கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே, நாட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! 17 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம்!  - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று காணாமல் போன 17 பாதுகாப்பு படை வீரர்கள் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நக்சலைட்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, நேற்று கடும் துப்பாக்கிச்சண்டை நடந்த நிலையில், 17 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பாஸ்டார் என்ற பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நக்சலைட் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ரிசர்வ் போலீஸ், சிறப்பு அதிரடிப்படை, நக்சல் தடுப்புப் படை என்று பல்வேறு பிரிவினர் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில், இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. 

நீண்ட நேரமாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதால், பல வீரர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சண்டையின் போது காயங்களுடன் மீட்கப்பட்ட 14 வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மாயமான 17 வீரர்களின் சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army 17 soldiers died during naksal fallen victim


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->