மாயமான அதிகாரிகள்.. யாருக்காவது ஏதேனும் ஆச்சு.. எச்சரிக்கை விடும் இந்தியா.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் இரண்டு அதிகாரிகள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாயமான இவர்கள் இருவரும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும், காலை சுமார் 8.30 மணியிலிருந்து இவர்கள் இருவரையும் காணவில்லை என்றும் இந்திய தூதரகம் புகார் அளித்துள்ளது. 

மேலும், டெல்லியில் இந்திய அடையாளங்களுடன் பணியாற்றிய வந்த இரண்டு பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தானின் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ பிரிவுக்கு பணியாற்றி வந்த நிலையில், இவர்களை குறித்த உண்மையை கண்டறிந்து, இருவரையும் நாட்டை விட்டு இந்திய அரசு வெளியேற்றியது. 

இதன்பின்னர், பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளை துன்புறுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இரண்டு அதிகாரிகள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு இதுதொடர்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India warn Pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->