3 ஆம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்தில் ஜூன் மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 1 ஆம் தேதி வலுப்பெறும் தென்மேற்கு பருவக்காற்று, ஜூன் 3 ஆம் தேதி தென்மேற்கு பருவ மழையாக உருமாறும் என்றும், இதனால் நல்ல மழையை இந்திய மக்கள் எதிர்பார்க்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் மாவட்டங்கள் அதிகளவு மழைப்பொழிவை பெரும். கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மழைப்பொழிவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Southwest Monsoon Starts 3 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->