இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் திட்டம்.. எச்சரிக்கை விடுத்துள்ள உளவுத்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்குள் ஊடுருவ 320 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஈகைத் திருநாள், ரக்ஷாபந்தன் மற்றும் சுதந்திர தினம் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள் அடுத்தடுத்து இந்த மாதங்களில் கொண்டாடப்பட உள்ளது. 

இந்த தருணத்தில், ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ 120 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்காக எல்லையில் 27 பயங்கரவாத சிறப்புத் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எல்லைப் பகுதியில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்டதன் வாயிலாக இந்த தகவல் கசிந்துள்ளதாகவும், எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதனை வைத்தும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது ஏற்கனவே இந்தியாவிற்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஐ.நா முன்னதாகவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India risk for terrorist attack during Indian festivals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->