அதிகாலையிலேயே குலுங்கிய இந்தியா.. 3 மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலநடுக்கமானது, இந்தியாவிலும் தற்போது தலைதூக்க துவங்கியுள்ளது. டெக்டானிக் பிளேட்டுகள் என்று அறியப்படும் நிலநடுத்தட்டு நகர்ந்து மோதிக்கொள்ளும் விளைவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 

எரிமலை குழம்புகள் பூமிக்கடியில் இன்னும் சிறிது சிறிதாக டெக்டானிக் தட்டுகள் வழியாக தனது பாதிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் பல நிலநடுக்கமும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் உள்ள மிசோரம், லடாக், டெல்லி, குஜராத், பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 யை தாண்டவில்லை. 

இந்த நிலையில், இன்று காலை முதலாகவே இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் காலை 04.47 மணியளவில், அங்குல உணா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 2.3 ஆக பதிவாகியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் அருகே, காலை 7.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கன்ச் பகுதியில் காலை 7.57 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்த்த மக்கள் அச்சத்தில் செய்வதறியாது வீதியில் விழிபிதுங்கி நின்றனர்.

 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Gujarat, Assam, Madhya Pradesh earthquake today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->