பாகிஸ்தான் முயற்சியை முறியடித்தது இந்தியா..! திணறிய பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் (BAT Border Action Team) மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபூர் செக்டார் பகுதியில் (Hajipir Sector) இருந்து இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் கடந்த 10, 11, 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஊடுருவ முயற்சித்தனர். இதை எல்லையில் இருந்த இந்திய வீரர்கள் கண்டுபிடித்து முறியடித்தார்கள்.

அப்போது இந்திய வீரர் ஒருவரால் தெர்மல் இமேஜர் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அதில், பாகிஸ்தான் படையினர் ரகசியமாக மறைந்து வருவதும், அவர்களின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் கண்டுபிடித்து முறியடிப்பதும் இடம்பெற்றுள்ளது.

இந்திய வீரர்கள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்திய எல்லை பகுதியில் நடைபெறும் ஊடுருவல் முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து வந்துள்ளது. அதை பொய்யாக்கும் வகையில் இந்த காட்சிகள் அமைந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Foils Pakistan attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->