இந்தியாவில் அதிகரித்த கரோனா பலி எண்ணிக்கை... நான்காவது பலி.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 8,982 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவ குழுவின் சார்பாக மருந்து கண்டறியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், 220,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டிலும் இதன் தாக்கம் தற்போது துவங்கியுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் ஏற்கனவே மூன்று பேர் உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய நபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக டெல்லிக்கு வந்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India corona virus death peoples quantity increased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->