ஆப்கானிஸ்தான்: கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் வந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 

கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்து உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் தெரிவித்ததாவது, காபூலின் கல்வி மையத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India condemns terrorist attack on education centre in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->