அதிவேக இரயில் முன் விபரீத செல்பி ஆசை.. உடல் துண்டு துண்டாக சிதறி பலியான மாணவி..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள மெயினாக்குரி மாவட்டத்தில் இருக்கும் பயிற்சி மையத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள ஓடுளப்பரி நகரில் உள்ள நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் நதிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள இரயில் பாலத்திற்கு சிலர் சென்றுள்ளனர். இந்த நேரத்தில், இரயில்வே பாலத்தில் தொங்கியபடி இரயில் வரும் நேரத்தில் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். 

இந்த விபரீத முயற்சிக்கு இரண்டு மாணவிகள் தயாரான நிலையில், அப்பகுதி வழியாக சிலிகுரி - அளிபுர்த்தூர் நகர் இரயில் வந்துள்ளது. இந்த நிலையில், இரயில் வந்து கொண்டு இருக்க, எதிர்பாராத நேரத்தில் சுழன்று அடித்த காற்றால் மாணவி ஒருவர் இரயில் தண்டவாளத்திற்கு அருகே தள்ளப்பட்டுள்ளார். 

இதனையடுத்து இரயில் மாணவி மீது மோதியதில், மாணவி இரயிலுடன் சில தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி ஆற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மற்றொரு மாணவி ஆற்றுக்குள் குதிக்கவே, தண்ணீர் குறைவாக சென்றதால் காயத்துடன் உயிர் தப்பினார். 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து நதிக்கரையில் இருந்த இருந்த அனைவரும் பாலத்திற்கு சென்று பார்த்த போது விபரீதம் தெரியவந்துள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மற்றொரு மாணவியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

அந்த மாணவி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக இரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in west Bengal girl selfie in front of express train died


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->