பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்.!!
in west bengal firework industry fire accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலையில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில்., மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பர்கானாஸ் மாவட்டத்தில் இருக்கும் நைஹாத்தி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று தீடீரென வெடிவிபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும்., மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட நிலையில்., சுமார் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in west bengal firework industry fire accident peoples died