பாட்டிக்கும் - இளைஞருக்கு இடையே மலர்ந்த காதல்... இறுதியில் அரங்கேறிய சம்பவம்.!!
in uttarpredesh old lady love youngster
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் வினோதமான புகார் ஒன்று வந்தது. ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அளித்த அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டி, இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் மூதாட்டியும், இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் உறுதியுடன் கூறியுள்ளனர். இத்தகைய திருமண முடிவு தவறானது இருவரும் தங்களது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என என போலீசாரும், குடும்பத்தினரும் மற்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
யாருடைய அறிவுரையும் ஏற்காத இருவரும் பிடிவாதம் பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்த காவல்துறை காதல் ஜோடியை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர்.
English Summary
in uttarpredesh old lady love youngster