காதலன் மீது அதிகாலை 3 மணிக்கு ஆசிட் வீசிய காதலி.. விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் காதலனின் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டம் பவானிகஞ்ச் பகுதியை சார்ந்தவர் ரோகித் யாதவ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் அதிகாலையிலேயே எழுந்து பணிகளை துவக்குவது வழக்கம். 

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் வழக்கம்போல பால் பண்ணையில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது, இவரின் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. 

இதனால் அலறித்துடித்த இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ரோகித் யாதவும், அவரது உறவினர் தாய்பா என்ற என்ற பெண்மணியும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ரோகித் ஆசிட் வீசியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttarpredesh love boy acid attack by love girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->