பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தம்பதி.! முகநூலில் லைவ் போட்ட மகன்.!! விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!!
in uttarpredesh husband and wife attempt suicide due to rowdy torture
உத்திரப்பிரேதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு பின் புறத்தில்., அலறிக்கொண்டு கதறியலும் சத்தமானது அதிகளவு கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்., சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் தம்பதியொருவர் உடலில் எரிபொருளை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும்., உடலில் எரியும் தீயின் தாக்கம் தாங்க இயலாமல் அங்கும் இங்கும் ஓடுவதை பார்த்து அனைவரும் பதைபதைத்து கொண்டு இருக்கும் நிலையில்., காவல் துறையினரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு., அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளித்த மருத்துவர்., மேல் சிகிச்சைக்காக அங்குள்ள டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆலோசித்து., டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., தற்கொலைக்கு முயற்சித்த தம்பதி ஜுகேந்திரா (வயது 45) மற்றும் அவரின் மனைவி என்பதும்., இந்த தற்கொலை காட்சியை பதிவு செய்தது இவர்களின் மகன் என்பதும் தெரியவந்தது.
மேலும்., இது தொடர்பான விசாரணையில் உள்ளூரை சார்ந்த சத்யபால் சிங் என்பவன் தினமும் தொந்தரவு செய்து வந்த நிலையில்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும்., சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் துணை ஆய்வாளரை இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in uttarpredesh husband and wife attempt suicide due to rowdy torture