நேருக்கு நேர் மோதிக்கொண்ட சரக்கு இரயில்கள்.. வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!!
in uttarpredesh goods train accident video
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிஷாந்த் நகரில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து சரக்கு இரயில், தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது.
இதனைப்போன்று காலியான சரக்கு இரயிலானது எதிர்புறத்தில் தண்டவாளத்தில் பயணம் செய்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்கரவுளி பகுதியில் வந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் இரண்டு ரயில்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் 13 இரயில் பெட்டிகள் தடம் புறண்டுள்ள நிலையில், இரயில் ஓட்டுனர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
in uttarpredesh goods train accident video