20 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் - தந்தை.! விசாரணையில் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.!!
in uttarpredesh baby killed by mother and dad police investigation
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் இருக்கும் நகரில் வசித்து வரும் நபரின் பெயர் வசீம். இவரது மனைவியின் பெயர் நஸ்மா. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த நிலையில்., கணவர் பணியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., இவர்கள் இருவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே வசீம் பணியில்லாமல் வீட்டில் இருந்து வரும் தருணத்தால்., கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்ததை அடுத்து., குழந்தையை கவனித்து கொள்வது குறித்து பிரச்சனை நடந்துள்ளது. இதனால் இருவரும் முடிவெடுத்து., இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் திட்டப்படி., பிறந்து 20 நாட்கள் ஆன நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளை., அங்குள்ள குளத்தில் வீசி கொலை செய்துவிட்டு., கொலையை மறைப்பதற்காக கடத்தல் நாடக ஆடியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் இறுதியில்., இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., தந்தை பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருவதால்., குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும் துயரை அனுபவிக்கும் என்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in uttarpredesh baby killed by mother and dad police investigation