நாயை போல கத்து.. மனைவி வீட்டாரின் கொடுமை... கண்ணீரில் கணவன்.!!
in uttarpredesh a man tortured by his wife family members
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் நகரில் வசித்து வருபவரின் பெயர் இக்ராமுதீன். இவரின் திருமணம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் நடைபெற்ற நிலையில், இவரது திருமணத்திற்கு இக்ராமுதீன் மனைவி குடும்பத்தினர் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ காட்சிகளின் படி, நபரொருவரை நாய் சங்கிலியில் கட்டிவைத்து, அவரை இழுத்து சென்று நாயை போல குரைக்க சொல்லி வற்புறுத்துகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இக்ராமுதீன் தெரிவித்த சமயத்தில், கடந்த மே மாதம் 2019 ஆம் வருடத்தில் இந்த குற்றம் நடைபெற்றது. எனது திருமணம் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் நடைபெற்றது. இதனால் எனது மனைவியின் குடும்பத்தினர் என் மீது கடுமையான வெறுப்பில் இருந்து வந்தனர்.
இதனால் என் மீது தாக்குதல் நடத்தினர், இந்த வீடியோ காட்சியையும் அவர்களே பதிவு செய்து வைத்திருந்தனர். எனது மனைவியுடைய சகோதரர் காவல் அதிகாரி என்பதால், இது தொடர்பாக காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்ட சமயத்தில், இந்த வீடியோ பதிவை நாங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலானது மூலமாக கண்டறிந்தோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in uttarpredesh a man tortured by his wife family members