பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்.. பெண்ணின் தந்தையை கொடூர கொலை செய்த காமுகன்.!!
in uttar predesh girl father killed couldn't return sexual abuse case
இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பகுதியில் வசித்து வரும் பெண்ணை உபாத்யாய் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை காவல் துறையினர் பெயருக்கு ஏற்றுக்கொண்டு, இது குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் தலைமறைவாக இருந்து வந்த கொடூரன், பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை வாபஸ் பெறக்கூறி பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளான்.
புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததால், பிப்ரவரி 1 ஆம் தேதி பெண்ணின் தந்தை மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சமயத்தில், பெண்ணின் தந்தை அவரின் வீட்டருக்கே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காமுகன் பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை வாபஸ் பெற மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் கொலையாளியை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in uttar predesh girl father killed couldn't return sexual abuse case