இரண்டு வருடமாக பிச்சையெடுத்த கோடீஸ்வரர்.. அண்ணனை கோவிலில் வந்து கட்டியணைத்து கதறியழுத சகோதரி.!! - Seithipunal
Seithipunal


விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது தாயாரின் உயிரை காப்பாற்றுவதற்கு, பெரிய பணக்காரராக இருந்தாலும் 48 நாட்கள் கோவிலில் பிச்சையெடுத்து தனது தாயாரை காப்பாற்றுவார். 

இந்த படத்தின் கதையே உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட நிலையில்., உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அஸாம்கார் அருகேயுள்ள அம்பலா பகுதியில் இருக்கும் அன்ஜமண்டி கோவிலில் இரண்டு வருடமாக நபரொருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

மேலும்., சம்பவத்தினத்தன்று காலில் காயமுற்று இரத்தம் சொட்ட சொட்ட இருந்த நேரத்தில், கோவிலுக்கு வந்த பக்தர் சாஹில் என்பவர் அவரிடம் விசாரணை செய்துள்ளார். இந்த நேரத்தில் தனது பெயர் தனஜெய் தாகூர் என்றும்., தான் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சார்ந்த நபர் என்றும் கூறியுள்ளார். 

தனக்கு இருந்த போதை பழக்கத்தால் வீட்டினை விட்டு வெளியேறி பிச்சையெடுத்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தாகூரின் நினைவில் இருந்த சகோதரியின் அலைபேசி எண் விபரத்தை கேட்டறிந்துள்ளார். 

பின்னர் அவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த நேஹா தாகூர் தனது சகோதரரை கண்டு அழுது புலம்பி தந்து இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த விஷயம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttar predesh business man beggar in temple


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->