திருமண வீட்டில் சோகம்.. மின்சாரம் தாக்கி 4 பேர் உடல் எரிந்து பலி.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஹனுமன்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண சடங்குகள் நள்ளிரவு நேரத்தையும் கடந்து நடந்து கொண்டு இருந்துள்ளது. 

இந்த நிகழ்வின் போதே திடீரென பலத்த இடி-மின்னல் ஏற்பட்ட நிலையில், திடீரென மின்னல் திருமண பந்தல் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அருகில் தாக்கியது. இந்த சம்பவத்தில் திருமண பந்தல் சரிந்துள்ளது. 

இதன்போது, திருமண பந்தலில் இருந்த இரும்பு கம்பி, அவ்வழியாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியுள்ளது. கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததால் 7 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடலிலும் தீ பிடித்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Uttar Pradesh Marriage Function Electrical Shock Attack 4 Died


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->