எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல்.. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேரதிர்ச்சி.!!
in trichy girl body recovers in road side suspect investigation going on
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகேயுள்ள பாத்திமா நகர் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் 30 வயதுடைய பெண்ணின் சடலம் எறிந்த நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள்., இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து., இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in trichy girl body recovers in road side suspect investigation going on