டிக்டாக் பயனாளர்களே உஷார்..! வினையாகி உயிர்பறித்த விளையாட்டு சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


டிக் டாக்கில் வீடியோ போடுவதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினர் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோல, உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர் டிக்டாக்கினால் தற்பொழுது உயிரை இழந்து இருக்கின்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாய்கம்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு கேசவ் என்ற 18 வயது மகன் இருக்கின்றான். 

அவ்வப்போது தனது தந்தையின் துப்பாக்கியை வைத்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு லைக்குகளை அள்ளுவது வழக்கம். இதுபோலவே சம்பவ தினத்தன்றும் கேசவ் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் 

அப்பொழுது அவருடைய அம்மா காயத்ரி இதனை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், கேஷவ் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி கொண்டு சென்றுவிட்டார். 

அம்மாவிடம் கெஞ்சி, கெஞ்சி கேசவ் துப்பாக்கியை வாங்கி கொண்டு அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது.

இதனால் பதறியடித்து காயத்ரி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது டிக்டாக்வீடியோ செய்யும் பொழுது தெரியாம சுட்டு விட்டாரா என்பது குறித்து ஆய்வு செய்து இருக்கின்றனர். அப்போது வீடியோ எடுத்த பொழுது தான் துப்பாக்கி வெடித்து உள்ளது என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tic tok video making with gun child died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->