பள்ளி சிறுமியை காரில் கடத்தி., கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்..! விசாரணையில் பேரதிர்ச்சி.!!
in thiruvanandhapuram girl sexual harassment police arrest culprit
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகேயுள்ள கடினம்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவியொருவர்., கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் பள்ளி நிறைவுபெற்றதும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., காரில் வந்த கும்பலொன்று மாணவியை கடத்தி சென்றுள்ளது. சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியான பெற்றோர்., சிறுமி காணாத விஷயம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையிலும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில்., மறுநாள் காலை மாணவி தனது வீதிற்கு அழுதபடி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரிடம் விசாரித்த சமயத்தில்., சிறுமியை காரில் கும்பலொன்று கடத்தி சென்றதும்., பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில்., இது தொடர்பாக மாணவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மாணவியை நால்வர் சேர்ந்த கும்பலானது கடத்தி சென்று., அங்குள்ள கோவளம் பகுதியில் இருக்கும் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவி கூறிய அடையாளத்தின் படி சோஜன் (வயது 23) என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சோஜனிடம் மேற்கொண்ட விசாரணையில் அபிலாஷ் (வயது 25)., ரோமி (வயது 23) மற்றும் நிரஞ்சன் (வயது 25) ஆகியோர் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இவன்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvanandhapuram girl sexual harassment police arrest culprit