கல்லூரி மாணவிகளை மிரட்டி, முன்னாள் கல்லூரி முதல்வர் செய்த காரியம்.! கேரளாவில் பேரதிர்ச்சி., ஆடிப்போன காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அடுத்துள்ள அம்பலத்தரா அருகேயுள்ள கோவில் விளாகம் பகுதியை சார்ந்தவர் மனோஜ் (வயது 38). இவர் கேரள பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அரசு பணியில் சேருவதற்கு முன்னதாக., அதே பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். 

இவருக்கு மனைவியொருவர் இருந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும்., இவரின் தற்கொலை தொடர்பாக மனைவியின் உறவினர்கள்., அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்து., மனோஜிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., மனோஜின் அலைபேசி தகவல் மற்றும் குறுஞ்செய்திகளை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து மனோஜின் அலைபேசியை சைபர் கிரைம் காவல் துறையினர் சோதனை செய்ததில்., மனோஜின் அலைபேசியில் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள் இருந்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை, sexual harassment, sexual abuse, sexual torture,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து., கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய சமயத்தில்., கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்ததும்., மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும்., மனோஜின் இந்த கொடூர செயல்கள் அனைத்தும் மனோஜின் மனைவிக்கு தெரியவரவே., இதனையடுத்து அவரின் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக மனோஜின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvanandhapuram college students sexual harassment by principal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->