திருநெல்வேலி - ஜாம்நகர் அதிவிரைவு ரயிலுக்கு காத்திருந்த பேராபத்து..!! அதிஷ்டவசமாக நிகழ்ந்த பெரும் அதிசியம்.!!
in thirunelveli to jamnagar express train lucky missed accident
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகருக்கு அதிவிரைவு இரயிலானது நேற்று முன்தினதன்று காலை 7.45 மணியளவில் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த அதிவிரைவு இரயில் நேற்று மதியத்தின் போது., ராய்காட் மாவட்டத்தினை கடந்து பென் இரயில் நிலையத்திற்கு அருகே வந்து கொண்டு இருந்தது.
இந்த சமயத்தில்., தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டு., இரயில் பெட்டிகளும் பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இரயில் பயணிகள் கூச்சலிடவே., இரயில் நிலையை உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுனரும் சாமர்த்தியமாக இரயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
இரயில் நின்ற பின்னர் எஞ்சின் ஓட்டுநர் மற்றும் காப்பாளர் ஆகியோர் கீழிறங்கி தண்டவாளத்தை நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில்., இவர்களுக்கு அதிர்ச்சியாக தண்டவாளம் உடைந்து இருந்துள்ளது. இதுமட்டுமல்லாது உடைந்த இடத்தில் உள்ள இடைவெளியில் இரயில் பெட்டிகளின் ஒரு சக்கரமும் இறங்கியுள்ளது.
பயணிகளின் அதிஷ்டவசமாக இரயில் பெட்டிகள் கவிராமல்., தகுந்த சமயத்தில் இரயிலை சுதாரித்து நிறுத்தியதால்., பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக அங்குள்ள இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே அதிகாரிகள் மற்றும் ஒல்லியார்கள் உடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கினர். இந்த சமயத்தில்., அவ்வழியாக வந்த இரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் இரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தண்டவாளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு., சுமார் 2 மணிநேரம் கழித்த பின்னர் இரயில் போக்குவரத்து சீரானது.
Tamil online news Today News in Tamil
English Summary
in thirunelveli to jamnagar express train lucky missed accident