சங்கு ஊதிய நீதிமன்றம்..! 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காம கொடூரனுக்கு தீர்ப்பு..!!
in thiripura court order death for girl sexual harassment and killed culprit
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் தர்மானகர் நகராட்சி பகுதியில் இருக்கும் மகேசபூரில்., ஆறு வயதுடைய சிறுமியொருவர் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியன்று., கடந்த வருடத்தின் போது தீடீரென மயமாகினார். இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர் சிறுமியை காணாது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ தினத்தன்றே அதே பகுதியை சார்ந்த ரஞ்சன் என்ற 27 வயதுடைய காம கொடூரனும் காணாமல் போனது தெரியவந்தது. இந்த நிலையில்., காணாமல் போன சிறுமி சில நாட்கள் கழித்த பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சமயத்தில்., மாயமான ரஞ்சன் மட்டும் சில நாட்கள் கழித்து வந்துள்ளான். மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் நிறைவு பெற்றது.
மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பின்னர்., உடலை காட்டில் வீசினேன் என்று ஒப்புக்கொண்டான்.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையானது அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கிற்கான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இதனையடுத்து இந்த விஷயம் குறித்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காம கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiripura court order death for girl sexual harassment and killed culprit