வெளிநாட்டில் பணிக்காக சென்ற இளைஞரை குறிவைத்து திருமண ஆசை காட்டி பணம்பறிக்கும் பெண்.! விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்.!!
in thelungana girl doing culprit and thief work for marriage by matrimony
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சார்ந்தவர் கோரம் அர்ச்சனா. இவர் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி திருமண தகவல் மையத்தில் புதிய கணக்கை துவங்கி., நல்ல குணமுள்ள மணமகன் தேவை என்று கூறி பதிவு செய்துள்ளார்.
அந்த கணக்கில் தந்து பெயர் புஸ்தயி என்று அறிமுகம் செய்து., அழகான பெண்ணின் புகைப்படத்தை எடிட்டிங் செய்து பதிவேற்றமும் செய்துள்ளார். இதனை கண்ட வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இளைஞர்கள்., இவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் அலைபேசியின் மூலம் பேசி வந்த நிலையில்., திருமணத்திற்கு தேவையான நகைகள்., பட்டுபுடவைகள் மற்றும் பிற பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறவே., இவரது பேச்சில் மயங்கிய இளைஞர் ரூ.1.5 இலட்சம் தொகையை அனுப்பியுள்ளார்.
பணம் வந்தவுடன் சிறிது நேரம் கழித்து பெண்ணிற்கு தொடர்பு கொண்ட நிலையில்., அவரது அலைபேசி எண்ணானது அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தனது நண்பர்களை வைத்து சோதனை செய்துள்ளார்.
அந்த சமயத்தில்., அந்த பெண் இது போன்ற பலரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு அர்ச்சனாவை கைது செய்தனர்.
அந்த விசாரணையில்., அர்ச்சனா இது போன்று பல இளைஞர்களை ஏமாற்றியதும்., ஏற்கனவே இது தொடர்பான பிரச்சனையில் ஈடுபட்டு இருந்த நிலையில்., ஜாமினில் வெளிவந்த அர்ச்சனா மீண்டும் தனது லீலையை அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in thelungana girl doing culprit and thief work for marriage by matrimony