தஞ்சாவூரில் போர் விமான நிறுத்தம்..! விமானப்படை தளபதி அதிரடி.!!
in thanjavur air force aircraft soon
இந்திய இராணுவத்தின் சார்பாக கடந்த சில மாதங்களாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறவிருக்கும் தாக்குதல்களை முறியடிக்க., எதிரிகள் இந்தியாவிற்குள் நுழையாமல் இருக்க இந்திய முப்படைகளின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில்., தஞ்சாவூரில் முதல் முறையாக இந்திய போர் விமானங்கள் நிறுத்தப்படவுள்ளதாக விமானப்படை தளபதியான பகதாரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விமானப்படை தளபதி பகதாரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
டெல்லி நகரில் செய்தியாளர்களை சந்தித்த பகதாரியா சுகோய் - 30 இரக போர் விமானங்களை கொண்ட படையணியானது தஞ்சாவூர் படைத்தளத்தில் நிறுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும்., முதன் முறையாக எடுக்கப்படப்போகும் இந்நடவடிக்கையின் காரணமாக தெற்கு பிராந்தியத்தில் இருக்கும் விமான படையுடைய வலிமையானது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
விமானப்படையின் அங்கமாக தென்பிராந்தியத்தில் தஞ்சாவூர் விமானப்படை அணி செயல்படும் என்றும்., மாணவர்களுக்கான தேசிய மாணவர் படையின் மூலமாக பயிற்சி அளித்து இம்முயற்சி துவங்கப்படுவதால்., இராணுவத்திற்கும் - மக்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thanjavur air force aircraft soon