கொங்கன் இரயில் - பயணிகள் இரயில் மோதி பெரும் விபத்து..! துடிதுடிக்கும் பயணிகள்.!!
In telungana train accident peoples injured
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. உலகம் முழுவதிலும் அரங்கேறும் விபத்துகளில் சிக்கி பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மனிதர்களின் தேவைக்காக கண்டறியப்பட்ட பொருட்களால் மனிதரின் அஜாக்கிரதை மற்றும் இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக விபத்துகள் தொடர்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சிக்குடா நகரில் இருக்கும் நிம்போலி அட்டா பகுதிக்கு அருகில் கொங்கன் அதிவிரைவு வண்டி மற்றும் பயணிகள் இரயில் வண்டி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் வழியால் அலறித்துடித்த நிலையில்., இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட மீட்பு படையினர் 30 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும்., இவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது நின்று கொண்டு இருந்த கொங்கு அதிவிரரைவு வண்டியின் மீது பயணிகள் இரயிலானது மோதியுள்ளதால்., சிக்னல் கோளாறின் காரணமாக இவ்விபத்து அரங்கேறியிருக்காம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரயில்வே வழித்தடத்தில் இரயில் சேவையானது பாதிப்படைந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In telungana train accident peoples injured