மகனை எரித்து கருணை கொலை செய்த பெற்றோர்.! கண்ணீர் துயர வாக்குமூலம்.!!
in telungana son killed by parents
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியை சார்ந்தவர் மகேஷ். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவி இரு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில்., இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான இவர் ஊரில் இருக்கும் மக்களிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இது மட்டுமல்லாது வீட்டிலும் இதனைப் போன்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையானது தொடர்ந்த நிலையில்., கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக மனைவி பிரிந்து சென்றதாக தெரிய வருகிறது. இந்த நிலையில்., தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த இவர் தனது பெற்றோரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இது மட்டுமல்லாது தனது தந்தையின் பெயரில் இருக்கும் சொத்துக்களையும் தனது பெயரை மாற்றித் தரும்படி தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால்., விரக்தி அடைந்த பெற்றோர் இவரை கருணைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்தன்று தனது மகன் குடித்துவிட்டு பிரச்சனை செய்த நிலையில்., பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்ததுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in telungana son killed by parents