மனைவியின் தர்ம அடியில் இருந்து தப்பிக்க கட்டியணைத்த கள்ளகாதல் ஜோடி..! என்ன கோவாலு இப்படி ஆகிவிட்டது?...!!
in telungana illegal affair gopal slap by wife
இந்த உலகத்தில் பல விதமான பிரச்சனை நடைபெறும் நிலையில்., கள்ளக்காதல் பிரச்சனை என்பது பெரும் துயரமாக மாறி வருகிறது. திருமண முடிக்கப்பட்ட துணைக்கு துரோகம் இழைக்கும் சோகமானது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்., கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை - கள்ளகாதலியோடு சேர்த்து புலந்து கட்டிய மனைவி தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்டல் மாவட்டத்திற்கு அருகேயுள்ள அல்வால் என்னும் கிராமத்தை சார்ந்தவர் கோபால். இவருக்கு ஏஞ்சல் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில்., கோபாலுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்த நிலையில்., இந்த விஷயம் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மனைவி தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து., ஊரார்களின் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் இருவரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரையும் சேர்த்து வைத்து., கோபாலை எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில்., சில நாட்கள் அமைதி காத்து., பின்னர் கள்ளத்தொடர்பை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இந்த சமயத்தில்., அங்குள்ள சுபாஷ் நகரில் இருக்கும் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்த மனைவி., கணவனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தன்று உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவனின் கள்ளகாதலி இல்லத்திற்கு சென்று., அங்கு படுக்கையறையில் இருந்த கணவனை அடித்து நொறுக்கியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து நொறுக்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடியும் தங்களை காத்துக்கொள்ள கட்டியணைத்த நிலையில்., தர்ம அடி தாறுமாறாக விழுந்தது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in telungana illegal affair gopal slap by wife