திருமண வாழ்க்கையின் இன்னிசை கச்சேரி வாழ்க்கையின் இறுதி ஒலியான சோகம்.. ரிசப்ஷனில் மாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கும் போதகன் நகர் நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த நேரத்தில் இசைக்கப்பட்ட இசைக்கச்சேரியின் மூலமாக மாப்பிள்ளையின் உடல்நலமானது பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்துள்ளது. திருமண வரவேற்பு நடைபெற்று முடிந்ததும் சில நிமிடத்திற்கு உள்ளாகவே, தீடீரென மாப்பிள்ளையும் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். 

இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதன்பின்னர் குடும்பத்தினர் மற்றும் மணப்பெண் இல்லத்தினர் என அனைவரும் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகவே, திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற இசைக்கச்சேரியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Telangana new married man died reception function sound heart attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->