பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்., பேரதிர்ச்சி திருப்பம்..!!
in telangana doctor sexual harassment killed police investigation going on
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தை சார்ந்தவர் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 26). இவர் அங்குள்ள கொல்லாபுரில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில்., நேற்று முன்தினதன்று வழக்கம் போல பணியை முடித்துவிட்டு மருத்துவரை சந்திப்பதற்கு அங்குள்ள கச்சிபவுலிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் இவரது இரு சக்கர வாகனமானது எதிர்பாராத விதமாக பஞ்சராகவே., அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் பஞ்சர் ஒட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இத்தகவலை தனது குடும்பத்தாருக்கு தெரிவித்த நிலையில்., இரவு 9 மணியன் போது தனது சகோதரிக்கு தொடர்பு கொண்டு பஞ்சர் சரியாகிவிட்டது என்றும்., தொண்டுப்பள்ளி சுங்கச்சாவடி அருகே இருப்பதாகவும்., எனக்கு பயமாக உள்ளது., நீ என்னுடன் பேசிக்கொண்டு இரு என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்ட பதறிப்போன சகோதரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து சகோதரியுடன் பேசிக்கொண்டு இருந்த நிலையில்., சிறிது நேரத்தில் அலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பதற்றமடைந்த டோல்கேட் பகுதிக்கு குடும்பத்தினர் விரைந்த நிலையில்., இது தொடர்பாக சாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., ஐதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஷாத்நகர் பாலத்திற்கு கீழே அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றினர்.
விசாரணையில் இது பிரியங்காவின் உடல் என்று தெரியவரவே பெரும் அதிர்ச்சி அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டது. மேலும்., சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜோடி காலனி., உள்ளாடை மற்றும் பர்ஸ்., காலி மது பாட்டில் இருப்பதை கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிரியங்காவின் உடலை அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., கண்காணிப்பு காமிராக்கள் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியின் ஓட்டுநர் மற்றும் க்ளீனரை கைது செய்துள்ளனர்.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர், அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது பிரியங்கா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in telangana doctor sexual harassment killed police investigation going on