விபத்தை உயரத்தில் இருந்து எட்டிப்பார்த்த காவல் அதிகாரிக்கு அரங்கேறிய சோகம்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.!!
in Telangana car accident police slipped and died form 50 feet bridge
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மேம்பாலத்துடைய தடுப்பு சுவரினை உடைத்துக்கொண்டு காரொன்று, சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் காரினை மீட்க சென்ற காவலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவர் தனது மனைவி சுவரூபாவுடன் அங்குள்ள அழுக்குனூர் மேம்பாலம் வழியாக காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.
இந்த நேரத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த காரனது சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் உயிரிழந்த நிலையில், இவரது மனைவி படுகாயத்துடன் அலறித்துடித்தார்.
இந்த விபத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, பொதுமக்களும் ஆற்றுப்பாலத்தின் கீழே சென்று காரினை நகர்த்திக்கொண்டு இருந்தனர்.
சுவரூபாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து நடைபெற்ற பாலத்திற்கு கீழே இறங்க கயிறு கட்டப்பட்டு இருந்தது. மேலும், பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அங்குள்ள கரீம்நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் பாலத்தின் கீழே பார்த்துக்கொண்டு இருக்கையில், எதிர்பாராத விதமாக 50 அடி பள்ளத்திற்குள் விழுந்தார். கீழே இருந்தவர்கள் காரினை புரட்டிப்போட்டு கொண்டு இருந்த நிலையில், காருக்கு மிக அருகில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கரீம்நகரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது மனைவி சுவரூபாவுடன் அழுகுநூர் மேம்பாலம் வழியாக காரில் சென்ற போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே ஸ்ரீனிவாஸ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கரீம்நகர் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் பாலத்தில் இருந்து கயிறுகட்டி கீழே இறங்கியபோது, திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Telangana car accident police slipped and died form 50 feet bridge