வீட்டிற்கு செல்ல பேருந்து வராததால், அரசு பேருந்தை திருடி வீட்டிற்கு அரசு ஊழியர்... பஸ்ஸை காணாது திகைத்துப்போன ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


பணியை முடித்துக்கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர், தனது ஊருக்கு செல்ல பிற பேருந்து வராததால், அரசு பேருந்தையே திருடி இயக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாராபாத் பேருந்து நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர், காலையில் பணிக்கு வழக்கம்போல வந்து தனது பணியை மேற்கொண்டுள்ளார். பின்னர் பணி நிறைவடைந்ததும் பேருந்தை செட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

இந்த நேரத்தில், இவர் செல்ல வேண்டிய வழியில் எந்த பேருந்தும், வாகனங்களும் நீண்ட நேரத்திற்கு வராமல் இருந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நபர் பொறுத்து பார்த்து பொங்கியெழுந்துள்ளார். 

இவரது முடிவின் படி, அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அம்மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை திருடி சென்று, தான் செல்லும் இடம் வந்ததும், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.  

சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தை காணாது பதறிப்போன ஊழியர்கள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நேரத்தில், மேற்கூறிய தகவல் வெளிவந்துள்ளது. இதன்பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in telangana bus driver stolen and going to her native


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->