நண்பனின் காதலுக்காக பெண்ணாக மாறி திருமணம்.. வாழ்க்கை கசந்ததும் நடுத்தெருவில் நிறுத்திய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் சந்தோஷ். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்று வரும் நிலையில்., இதே வகுப்பில் அபிஷேக் என்ற மாணவர் பயின்று வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும்., அபிஷேக்குடைய நடை மற்றும் பாவனை பெண்மையை ஒத்து இருந்ததால் சந்தோஷிற்கு அபிஷேக்கின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இது காதலாகவும் மலர்ந்துள்ளது. 

இதனையடுத்து கல்லூரியில் படிப்பு நிறைவு பெற்றும் அபிஷேக்கை விட்டு பிரிய மனமில்லாது தவித்த சந்தோஷ்., அபிஷேக்குடன் வாழ வேண்டும் என்று நினைத்து தனது முடிவை தெரிவித்துள்ளார். 

மேலும்., இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே இல்லத்தில் வாழலாம் என்று அபிஷேக்கை தொடர்ந்து சந்தோஷ் வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்காத அபிஷேக் தனது வீட்டிற்கு தான் ஒரே மகன் என்றும்., தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்றும் தன்னிலையை கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். 

இருப்பினும் சில தினங்களுக்கு பின்னர் சந்தோஷின் காதலை ஏற்று கொண்டு வீட்டினை விட்டு இருவரும் வெளியேறிய நிலையில்., சந்தோஷின் வற்புறுத்தலின் பேரில் அபிஷேக் பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். தனது பெயரை அர்ச்சனா என்றும் மாற்றியுள்ளார். 

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செய்து வந்த நிலையில்., திருமணம் முடித்த சில நாட்களிலேயே அபிஷேக்கை சந்தோஷ் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும்., தன்னுடன் வாழ இயலாது என்று கூறி தகராறும் செய்துள்ளார். 

தற்போது அனைத்தையும் இழந்து நடுவீதியில் நிற்கும் அபிஷேக் தனது நிலை குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும்., திருநங்கைகள் சங்கத்திடம் புகார் அளித்தும் விசாரணை மேற்கொள்ள கூறி கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Telangana boy married same gender end cheating


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->