17 வயது சிறுவன் கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! வைரலாகும் ட்விட்டர் பதிவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானர் பகுதியை சார்ந்த சிறுவன் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ள கருத்து பெரும் வைரலாக பரவி வருகிறது. மேலும்., இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ட்விட்டர் பக்கத்தில் சிறுவன் தெரிவித்துள்ளது., நான் மத்திய வேளையில் சாலையில் நடந்து சென்ற நேரத்தில் அங்குள்ள பொது கழிப்பறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த இரண்டு வாலிபர்கள் என்னை நெருங்கி வந்து பாலியல் ரீதியாக தீண்டல்கள் இழைத்தனர்.

என்னை காப்பாற்றாத அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். நான் கதறியழுத நிலையில்., அவர்கள் என்னை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து., பின்னர் வீட்டிற்கு வந்தேன். 

male sexual abuse,

நான் இதனை மறக்க நினைக்கிறன். இருப்பினும் என்னால் மறக்க இயலவில்லை. எனக்கு வயது 17 ஆகும் நிலையில்., எனது கன்னித்தன்மை பறிபோனதாக கருதுகிறேன். இது பாலியல் வன்கொடுமையா? இல்லை வேறெதுமா? என்பதை எனக்கு குறிப்பிட தெரியவில்லை. 

இது தவறு என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த விஷயத்தை யாரிடமும் கூறலாமா? கூறக்கூடாதா? என்பதும் தெரியவில்லை. எனது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்து அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவும் இல்லை. 

காவல் நிலையத்திற்கு செல்லவும் விருப்பமில்லை. எனக்கு வீட்டினை விட்டு செல்லவே பயமாக உள்ளது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது மனப்பாரத்தை ட்விட்டரில் உண்ணலிடம் தெரிவித்துளேன். இதனை எதிர்ப்பது எப்படி என்று எனக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளான். இதனை கண்ட பலரும் சிறுவனிற்கு ஆறுதல் அளித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajasthan boy sexual abuse twitter post trending


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->