இராஜஸ்தானில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பதைபதைப்பு வீடியோ வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


ஆழ்துளைக்கிணறுகள் போன்ற விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. திறந்த வெளியில் இருக்கும் ஆழ்துளைக்கிணறுகள் குறித்த தகவல்களை அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உங்களின் இல்லத்தில் இருக்கும் அல்லது இல்லத்திற்கு அருகில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் இருந்தால் நீங்கலாக மூடிவிடுங்கள் அல்லது அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு கூறப்பட்டது.

இராஜஸ்தான் மாநிலத்திலும் அரசால் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு., மக்களுக்கான சலுகைகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டால் சன்மானமும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்., சிரோஹியில் 4 வயது குழந்தை ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல் வெளியானது. 

borewell, bore well rajasthan child struggled,

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோஹியில் நான்கு வயதுடைய குழந்தை ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ள நிலையில்., இது குறித்து தகவலறிந்த மருத்துவ குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீட்பு பணிகள் அதிரடியாக நடைபெற்று வந்தது. 

மேலும்., ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தை 15 அடியில் இருந்த நிலையில்., குழந்தைக்கு தேவையான தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். சுமார் எட்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஒன்று சேர்ந்து கடந்த 5 ஆம் தேதியன்று குழந்தையை மீட்டெடுத்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in rajasthan bore well child struggle rescued video release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->