17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தந்தை..! இறுதி நாள் குறித்த நீதிமன்றம்.. கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா அருகேயுள்ள நயப்புரா பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமி, கடந்த 2015 ஆம் வருடத்தின் மே மாதம் 13 ஆம் தேதியன்று வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். 

இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்ற தகவல் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையில், சிறுமியின் தந்தையால் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும், பின்னர் சிறுமி தந்தையாலேயே கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான சிறுமியின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும், சிறுமி பல வருடமாக தந்தையால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதை  ஒப்புக்கொண்டுள்ளார். 

பின்னர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ சோதனையிலும் சிறுமியின் தந்தை குற்றவாளி என்று உறுதியானதை அடுத்து, இது தொடர்பான வழக்கு அங்குள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதி அசோக் சவுதாரி முன்னிலையில் வந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Rajastan child sexual abuse and murder by father court judgement death sign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->