கல்லூரி பேருந்தை பார்த்து இருசக்கர வாகனத்தில் வித்தை காட்டிக்கொண்டு சென்ற மாணவர்.. உடல்நசுங்கி உயிரிழந்த பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீராம் நகர் பகுதியை சார்ந்தவர் அருள்செல்வம். இவரது மகனின் பெயர் சுதர்சனம் (வயது 21). இவர் அங்குள்ள அபிஷேகப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். 

மேலும், கல்லூரிக்கு செல்லும் நேரத்தினை தவிர்த்து பிற நேரத்தில் வில்லியனூர் பகுதியில் உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நேரத்தில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக கடையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இவர் அங்குள்ள ஆச்சாரியாபுரம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் பல்க் அருகே சென்ற நேரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிச்சென்ற கல்லூரி வாகனம் சென்றுள்ளது. மேலும், இந்த கல்லூரியில் தான் இவர் தற்போது பயின்று வருகிறார். 

தனது நண்பர்கள் உள்ளே இருப்பதை கண்டு உற்சாகமடைந்த அவர், இரு சக்கர வாகனத்தில் கைகளை காட்டியபடியே சென்று கொண்டு இருந்த நிலையில், பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி வாகனத்துடன் சுதர்சனம் கீழே விழுந்துள்ளார். 

இதனால் பேருந்தின் பின்புற சக்கரம் சுதர்சனத்தின் மீது ஏறி இறங்கவே, நண்பர்களின் கண் முன்னரே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட இவரது நண்பர்கள் கதறியளவே, அங்கு பெரும் சோகமே ஏற்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In puthuchery youngster died in accident when going college with bike


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->