ஓணானை வேட்டியில் விட்ட வாலிபருக்கு வலைவீச்சு.. காவல்துறையினர் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதலியார்பேட்டை விடுதலை நகர் பகுதியை சார்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 29). இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்., கணவரை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில்., இதே குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் லோகபாலன் என்கிற விஜய் (வயது 32). இவர் சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்கு முன்னதாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி., வீட்டிற்குள் செல்ல இயலாதவாறு இடையூறு செய்துள்ளார். 

விஜயின் வாகனத்தை சாமுண்டீஸ்வரி அப்புறப்படுத்தவே., இதனால் ஆத்திரமடைந்த விஜய் கோபமடைந்து தகராறு செய்துள்ளார். மேலும்., அவதூறான மற்றும் தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளார். 

இதனால் ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி., விஜயின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். மேலும்., இது தொடர்பாக சாமுண்டீஸ்வரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., விஜயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery youngster arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->