உறவினரின் மனைவி குளிப்பதை பார்த்து ரசித்த காமுகன்... தட்டிக்கேட்ட கணவனின் மனைவியை உடைத்தனுப்பிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவழக்குப்பம் அருகேயுள்ள டி.என்.பாளையம் புதுநகர் பகுதியை சார்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் மினிவேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். 

இந்நிலையில், இவரது மனைவி வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். இப்பகுதியை சார்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் உறவினர் வெங்கடேசன் தங்கியிருந்து வந்துள்ளார். 

இவர் சத்தியமூர்த்தி மனைவி குளிப்பதை மறைந்து நின்று பார்த்துள்ளார். இதனை எதிர்ச்சியாக சத்தியமூர்த்தியின் மனைவி கண்டுகொள்ளவே, அலறல் சத்தம் எழுப்பியுள்ளார். பின்னர் இது தொடர்பாக கணவரிடம் முறையிட்டுள்ளார். 

இதன்பின்னர் இது தொடர்பாக சத்தியமூர்த்தி வெங்கடேசனிடம் தட்டிக்கேட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் செங்கலை வைத்து சத்தியமூர்த்தியின் தலையில் தாக்கிவிட்டு மிரட்டி சென்றுள்ளார். இதனால் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் இது தொடர்பான தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் தலைமறைவாகவே, வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery wife bathing man viewed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->