வீட்டில் தனியாக இருந்த குழந்தை.. விளையாட்டு ஆவலில் அரங்கேறிய சோகம்..! பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!!
in puthuchery baby died unfortunately parents out of home
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவலகுப்பம் அடுத்துள்ள பி.என்.பாளையம் புது நகர் பகுதியைச் சார்ந்தவர் இளவயதன் (வயது 40). இவர் சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அலங்காரம் செய்ய வேலையை செய்து வந்துள்ளார்.
இவரது மனைவியின் பெயர் முத்துலட்சுமி (வயது 35). முத்துலட்சுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டரை வயதுடைய தனனியா என்ற பெண் குழந்தையும்., எட்டு மாதம் ஆகும் ஆண் குழந்தையும் இருக்கிறது.
இந்த நிலையில்., நேற்று பணியின் காரணமாக இளவயதன் வெளியே சென்று விட்ட நிலையில்., மனைவி முத்துலட்சுமி வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் குழந்தைகள் இருவரையும் இளவயதன் தாயார் கவனித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில், எட்டு மாத ஆண் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மாவை வாங்க அங்கு உள்ள அங்கன்வாடி மையத்திற்கு இளவயதன் தாயார் சென்றுள்ளார். வீட்டில் தனியாக குழந்தை தனனியா இருந்த நிலையில்., அலங்கார உபகரணங்களை வைத்து இருந்த அறைக்குள் சென்று விளையாடியுள்ளார்.
இந்த நேரத்தில் அங்கிருந்த இரும்புச் சட்டங்கள் எதிர்பாராதவிதமாக சிறுமியின் மீது சரிந்து நசுக்கவே., குழந்தை தனனியா அங்கேயே மயக்கமடைந்துள்ளார். வெளியில் சென்றிருந்த பாட்டி வீட்டிற்கு வந்து குழந்தை இடிபாடுகளில் சிக்கியிருப்பதை கண்டு அலறிதுடித்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அனைவரும் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthuchery baby died unfortunately parents out of home